பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி கூறும்போது, ‘ நமது பக்கத்து மாநிலமான மகாராஷ்டிராவில் கடந்த நான்காண்டுகளாக மூன்று முறை அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சொந்த மாமாவுக்கு துரோகம் செய்துவிட்டு அஜித்பவார் அணி மாறி, துணை முதல்வராகி உள்ளார். அஜித்பவார் இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிகாரம் என்று வரும் போது, சொந்த-பந்தங்களுக்கு முக்கியத்துவுமில்லை என்பது மகாராஷ்டிரா மாநில அரசியல் நமக்கு புரிய வைத்துள்ளது. மகாராஷ்டிராவில் நடந்துள்ள அதே அரசியல் மாற்றம் விரைவில் கர்நாடக மாநில அரசியலிலும் நடக்கும். அங்கு ஒரு அஜித்பவார் உருவாகி இருப்பது போல், நமது மாநிலத்திலும் ஒரு அஜித்பவார் உருவாகுவார். இதை விரைவில் மக்கள் பார்ப்பார்கள். நான் எதிர்க்கட்சி என்ற முறையில் குற்றம் சொல்லவில்லை. எதார்த்தமாக நடக்கப்போகும் கணிப்பை கூறுகிறேன். வரும் நவம்பர் மாதம் மாநில அரசியலில் பெரிய மாற்றம் கண்டிப்பாக ஏற்படும்’ என்றார்.
The post கர்நாடகாவிலும் விரைவில் அஜித் பவார் உருவாகலாம்: எச்.டி.குமாரசாமி ஆருடம் appeared first on Dinakaran.